📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 159grammar_exercise

அறிவோம் தெளிவோம்

Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL

அறிவோம் தெளிவோம் இந்தியத் திரைப்பட இயக்குநர்களுள் குறிப்பிடத்தக்கவர், சத்தியஜித் ரே. இந்தியமொழிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர், இரவீந்திர நாத் தாகூர். இருவரும் வங்கமொழிக்குப் பெருமை சேர்த்தவர்களாவர். தாகூரிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்த சத்தியஜித் ரே, அவரது பண்பட்ட சிந்தனைத் தளங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

தாகூரின் எழுத்துப் படைப்புகளை நேரில் கண்டு, கேட்டறியும் உயிர் செறிந்த கலையனுபவங்களாக, உலகமெல்லாம் இரசித்து மகிழும் வகையில் உருவாக்கிய பெருமை, சத்தியஜித் ரேவையே சாரும். தாகூரின் ‘சாருலதா‘, ‘வீடும் உலகமும்‘ (கரே பைரே) என்னும் இருநாவல்கள், சத்யஜித் ரேவால் உருவாக்கப்பட்ட அரிய திரைப்படக் கலை வடிவங்கள். 1961ஆம் ஆண்டில், தாகூரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், இரவீந்திர நாத் தாகூர் தொடர்பான ஆவணப்படம் ஒன்றை உருவாக்கினார். கலை இலக்கிய சிந்தனாவாதி ஒருவர் பற்றிய படம் என்றால், அஃது இப்படித்தானே இருக்கவேண்டும் என்று கூறத்தக்க அளவில், அருமையான படைப்பாக, அந்த ஆவணப்படம் இன்றளவும் விளங்குகிறது.

பேராசிரியர்: ஆமாம். ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘வெயிலோடு போய்‘ என்ற சிறுகதையைச் சசி ‘பூ‘ என்ற பெயரில் திரைப்படமாக்கினார். இக்கதை எளிமையான பெண்ணின் பேரன்பைப் பேசுகிறது. அகிலன் : மகேந்திரன் ‘முள்ளும் மலரும்‘ கதையில் சில மாற்றங்களைச் செய்ததாகச் சொன்னீர்கள்.

அப்படியென்றால் ஒரு நாவல் அல்லது சிறுகதை எந்த முறையில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது? பேர சிரியர்: ஒரு நாவலைத் திரைப்படமாக்கும் முறையை இருவகையாக பிரிக்கலாம். முதலாவது, வாக்கியத்திற்கு வாக்கியம் மூலப்படைப்பைச் சார்ந்தே திரைப்படக்காட்சிகளை அமைப்பது. இரண்டாவது முறை திரைப்படத்தின் சாத்தியக்கூறுகளை, பலத்தை உணர்ந்து சினிமா மொழியில் ஒரு புதிய படைப்பை உருவாக்குவது.

நாவலாசிரியரின் மையக்கருத்தை உள்வாங்கி அதற்கேற்றபடி திரைக்கதையை அமைத்து அக்கருத்தைத் திரைப்படக் காட்சிகள் மூலம் வெளிக்கொணர்வது. முகிலன்: புரிகிறது ஐயா! சமீபத்தில் இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட திரைப்படங்களாக எவற்றைச் சொல்லலாம்? பேராசிரியர்: கி.ராஜநாராயணனின் கிடை (ஒருத்தி), ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்‘ (நான் கடவுள்), பாஸ்கர் சக்தியின் ‘அழகர்சாமியின் குதிரை‘ (அழகர்சாமியின் குதிரை), பி.எச்.

டேனியலின் எரியும் பனிக்காடு (பரதேசி), மு.சந்திரகுமாரின் ‘லாக்கப்‘ (விசாரணை), தமயந்தியின் தடயம் (தடயம்) ஆகியன திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. பரதேசி திரைப்படக் காட்சி வசந்தபாலன் இயக்கிய ‘அரவான்’ திரைப்படம் சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ புதினத்தின் ஒரு பகுதியே. ‘நோட்டா‘ படம் ஷான் கருப்பசாமி எழுதிய ‘வெட்டாட்டம்‘ நூலை அடிப்படையாகக் கொண்டதுதான். இதுபோன்றே அவ்வப்போது இலக்கியங்களிலிருந்து திரைப்படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் அவை சிறந்த கலைப்படைப்பாக மாறுவது இயக்குநரின் ரசனையையும் மக்களின் ரசனையையும் பொருத்ததே.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →