காலம் சிறுபத்திரிகைகளில் எழுதிய சிறுகதை ஆசிரியர்கள், தமிழ் இலக்கியத்துறையை ச் சார்ந்த பேராசிரியர்கள், பொதுவுடைமைக் கருத்துகளின்பால் ஈடுபாடுகொண்ட எழுத்தாளர்கள் முதலானோர் நவீன நாடகம் பற்றிச் சிந்திக்கத் தEொடங்கினர். இதன் விளைவாக இருபதாம் நூற்றாண்டின் இறுதி இருபத ண்டுகள், தமிழ் நாடகக்கலையின் மறுமலர்ச்சிக் காலமாக அமைந்தன. நவீன நாடக ஆசிரியர்கள் படிப்பதற்காக நாடகங்களை எழுதவில்லை. அரங்கத்தில் நிகழ்த்துவதற்கு ஏற்ற வகையில் எழுதினர். வாசகர்களுக்கு என்று எழுதாமல் பார்வையாளர்களுக்காக எழுதினார். எண்பதுகளின் தEொடக்கத்தில் நிகழ்ந்த நாடகப் பயிற்சிப் பட்டறைகள், நாடகக் குழுக்களின் தEோற்றம், நாடக விழாக்கள் போன றவை நவீன நாடகத்திற்கு உந்து சக்தியாக அமைந்தன. நாடகப் பயிற்சிப் பட்டறைகளில் இந்திய, மேற்கத்திய நாடகக் கோட்பாடு, நடிப்பு, ஒப்பனை, அரங்கமைப்பு உள்ளிட்ட நாடகத் தயாரிப்பு தEொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. –களின் காலகட்டத்தில் நாடகம் குறித்த கட்டுரைகளை வெளியிடுவதில் கொல்லிப்பாவை, வைகை, விழிகள், யாத்ரா போன ற சிறுபத்திரிகைகள் குறிப்பிடத்தகுந்தவையாக இருந்தன. கணையாழியிலும் அவ்வப்போ து நாடக நிகழ்வுகள் குறித்த செய்திகளும் விமரிசனக் குறிப்புகளும் வெளியிடப்பட்டன. சிறுபத்திரிகைகளின் செயல்பாட்டைத் தEொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் நவீன நாடகக் குழுக்கள் உருவாயின. கூத்துப்பட்டறை, நிஜ நாடக இயக்கம், பரீ க் ஷா, வீதி போன றன களில் தEொடங்கப்பெற்ற நவீன நாடகக் குழுக்கள். ஜூலையில் ரெங்கராஜனால் நாடகத்திற்கெனத் தொடங்கப்பெற்ற ”நாடகவெளி” என்னும் இதழ் பத்து ஆண்டுகளில் நாற்பது இதழ்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 132poem
காலம்
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →