கரகாட்டம் தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்று கரகம். தலையில் கரகம் வைத்து ஆடுவதால் இப்பெயர் பெற்றது. சங்க இலக்கியங்களில் கரகாட்டம் ‘குடக்கூத்து‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்தபடி ஆடுவர்.
தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் "சக்திக்கரகம்' என்றும், தEொழில்முறைக் கரகத்தை "ஆட்டக்கரகம்' என்றும் சொல்வர். கரகாட்டம் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி போன ற மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களின்போது நிகழ்த்தப்படுகின்றது. இவ்வாட்டத்திற்கு நையாண்டி மேளம், சிறிய உடுக்கை, பெரிய உடுக்கை, சத்தக்குழல், பறை போன ற இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன.