📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 49grammar_exercise

2. கதைமாந்தர் உரையாடல்

Chapter 1: கதையியல் · Advanced Tamil

. கதைமாந்தர் உரையாடல் கதை நிகழ்வுகளின் போக்கிற்குப் பொருந்துவதாகவும் அந்தக் கதைமாந்தர் களின் மொழியிலும் உரையாடல் இயல்பாக அமையவேண்டும். கதைமாந்தர் பேச்சினை இரட்டை மேற்கோள் குறிக்குள் அடைத்துச் சொல்லவேண்டும். எ.கா.

“இப்ப நீ சொல்லப் போறியா இல்லையா?” ”முடியாது. என்ன பண்ணுவ?” எ.கா. “இப்ப நீ சொல்லப் போறியா இல்லையா?” – அவளை அவன் முறைத்துப் பார்த்தவாறே கேட்டான். ”முடியாது.

என்ன பண்ணுவ?” என்றவாறு சடக்கெ னக் கழுத்தை வெட்டிக் கொண்டு அறைக்குள் சென்றாள் அவள். எடுத்துக்காட்டு -இல் கதைமாந்தர் பேச்சுமட்டும் இருக்க, எடுத்துக்காட்டு -இல் அவர்களது உரையாடல் உணர்வுகளோடு கலந்திருப்பதைக் காணலாம்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →