சங்ககாலக் கவிதைகள் சங்ககாலக் கவிதைகள் தமிழரின் உயர்ந்த நாகரிகச் செழுமைக்கு அடிப்படையாக அமைந்தவை. இவை அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகள், கலைகள், கல்வி, அரசியல், பொருளாதாரம், வணிகம், வேளாண்மை குறித்த பதிவுகளை வெளிப்படுத்துகின்றன. அகம்: மாந்தர், அகமனத்தில் துய்க்கின்ற காதல், அன்பு, கருணை முதலான உணர்வுகளை வெளிப்படுத்துவது அகத்திணை. புறம்: மா ந்தர், புறவாழ்வில் கொண்டாடுகின்ற வீரம், கொடை, புகழ் முதலான பண்புகளை வெளிப்படுத்துவது புறத்திணை. அகம், புறம் சார்ந்த சங்ககாலக் கவிதைகள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா ஆகிய பா வகைமைகளில் அமைந்தவை.
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 12poem
சங்ககாலக் கவிதைகள்
Chapter 4: Front Matter · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →