📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 138question

அகநானூறு

Chapter 2: Front Matter · Tamil

அகநானூறு XI Std Tamil பெருங்கடலில் நீர்முகக்கும் முகிலே ச@ொல்நீ வான்வெளி இருளப் பரபரப்பாய் வரும்உலா போர்க்கள முரசாய்ப் பொழுதுக்கும் இடிமுழக்கம் அறநெறியாளன் ஆட்சியில் காக்கும் போர்க்கள வீரர் வாள்போல் பொறிமின்னல் நாளும் இவையெல்லாம் சும்மா நடிப்பா? அல்லது ஆளை அலைக்கழிக்கும் மழை ஆரவாரமா? பொன்பூ வேங்கை மாலை தEொடுத்து அணியும் தEோழியர் ஆயத்துடன் இருப்பாள் அழல்எரி அச@ோகஇலை ஆடை உடுப்பாள் காண்பதற்கு இனிய ஒயிலுடன் நடப்பாள் தழலை தட்டைக் கருவியொலி எழுப்பிப் பறவைகள் விரட்டித் தினைப்புனம் காப்பாள் தலைவியின் காட்டிலும் பொழிவாயா? இல்லை தப்பிப் பிழைத்துப் போய்விடுவாயா?

பாடலின் பொருள் தலைவனுக்குக் குறியிடம் சொல்லும் தோழி மேகத்திடம் சொல்வதுபோல் சொல்கிறாள்: “பெருங்கடலில் நீரை முகந்துகொண்டு செல்லும் மேகக் கூட்டமே! வானம் இருளும்படி உலாவுகிறாய். போர் முரசம்போல முழங்குகிறாய். முறைமை தெரிந்து அறநெறி பிழையாமல் திறமையுடன் ஆளும் அரசனின் போர்க்களத்தில் திறமை மிக்க போர்வீரன் சுழற்றும் வாள்போல மின்னுகிறாய்.

முழக்கமும் மின்னலுமாக நாள்தோறும் வெற்று ஆரவாரம் செய்கிறாயா அல்லது மழை பொழிவாயா? பொன்னென மலர்ந்த வேங்கை மலரைக் கட்டி அணிந்துகொண்டிருக்கும் தோழியர் ஆயத்தோடு மெல்ல மெல்ல நடந்து குறமகள் தினைப்புனம் காப்பாள். தழலை, தட்டை ஆகிய கருவிகளில் ஒலியெழுப்பிப் பறவை களை ஓட்டிக்கொண்டு காப்பாள். அவள் அசோக இலைகளால் தழையாடை அணிந்திருப்பாள்.

குறமகள் அப்படித் தினைப்புனம் காக்கும் பகுதியிலும் நீ மழை பொழிவாயா? “ தலைவி தினைப்புனம் காக்கும் இடத்துக்குத் தலைவன் வரலாம் என்பது குறிப்பு. இது இறைச்சிப் பொருள். இலக்கணக்குறிப்பு வளைஇ, அசைஇ – சொல்லிசை அளபெடைகள்; அறன், திறன் – ஈற்றுப்போலிகள்; பிழையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; அருஞ்சமம் – பண்புத்தொகை; எறிவாள்– வினைத்தொகை.

நூல்வெளி கற்பவை கற்றபின்... திணை பாடல் வரிசை எண்ணிக்கை பாலை , , , … குறிஞ்சி , , , … முல்லை , , , … மருதம் , , , … நெய்தல் , , , … அகநானூறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. இது, களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நூலுக்கு நெடுந்தொகை நானூறு என்ற பெயரும் உண்டு.

இந்நூலின் தொகுப்பு முறையில் ஓர் ஒழுங்கு உண்டு. வீரை வெளியன் தித்தனார் பாடிய ஒரேயொரு பாடல் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள கூற்றுமுறைகள் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக. XI Std Tamil கருப்பொருள் நிலம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை தெய்வ ம் சேயோன் மாயோன் வேந்தன் வருணன் கொற்றவை மக்கள் பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி, குறும்பொறை , நாடன், தோன்றல், கிழத்தி ஊரன், மகிழ்நன், மனைவி சேர்ப்பன், புலம்பன் விடலை, மீளி, எயிற்றி குறவர், குறத்தியர், கானவர் இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் உழவர், உழத்தியர், கடையர், கடைசியர் நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர் புள் கிளி, மயில் காட்டுக்கோழி நாரை, மகன்றில், அன்னம் கடற்காகம் புறா, பருந்து, கழுகு விலங்கு சிங்கம், புலி, கரடி, யானை மான், முயல் எருமை, நீர்நாய் சுறாமீன் செந்நாய் ஊர் சிறுகுடி பாடி பேரூர், மூதூர் பாக்கம், பட்டினம் குறும்பு நீர்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →