பிற தண்டனையும் வழங்கலாம். இரண்டு சல்லிகூட நான் செலுத்த மாட்டேன். சிறையில் அடைத்துவிடுவீர் எனப் பயந்து ஒரு வாரத்தில் பணம் தருவேன் என்று நீர் கருத வேண்டாம். ( தொகுதி பக்.
- ) கற்பவை கற்றபின்... . உங்களது ஒரு வாரத்திய நிகழ்வுகள நாட்குறிப்பில் பதிவு செய்க. .
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு விவரிக்கும் நிகழ்வுகள க் காலக்கோட்டில் அமைத்துக் காட்டுக. XI Std Tamil ஹிஜிறத்துக் காண்டம் - மதீனம் புக்க படல ம் ஹிஜிறத் என்ற அரபுச் சொல்லுக்கு இடம் பெயர்தல் என்பது பொருள். மக்கா நகரத்தின் குறைசி இன மக்கள், நபிகள் நாயகத்திற்குக் கொடுமைகள் பல செய்தனர். நபிகள் நாயகம் மக்காவை விட்டு, மதீனாவிற்கு வரவேண்டுமென்று மதீனா மக்கள் அழைத்தனர்.
அந்த அழைப்பை நபிகள் நாயகம் ஏற்றார். இசுலாமிய அறநெறிகளை வளர்க்க மக்காவை விட்டு மதீனா நகரத்திற்குத் தம் துணைவரான அபூபக்கர் முதலானோருடன், முல்லை நிலத்தையும் குறிஞ்சி நிலத்தையும் கடந்து மதீனா நகரத்தில் நுழைந்தார். அந்நகரினைக் காப்பிய இலக்கண நெறி நின்று உமறுப்புலவர் புகழ்ந்து பாடியுள்ளார். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்று இலக்கியம் சீறாப்புராணம்.
இது தமிழ் இலக்கிய மரபுகள ப் பின்பற்றி எழுதப்பட்ட தலை சிறந்த இசுலாமிய இலக்கியமாகும். பகையும் வறுமையும் நோயும் தீண்டாப் பொருள்வளம் நிறைந்த மதீனா நகரில் தானத்திலும் தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினைச் செலவியற் காண்டம் (ஹிஜிறத்துக் காண்டம்) காட்சிப்படுத்துகிறது. மாளிகை நகரம் வடவரை பHொருவென மலிந்த மேனிலைக் கடலென ஒலித்ததா வணத்தின் கம்பலைப் புடவியை அளந்தன பHோன்று வீதிகள் இடனற நெருங்கின மாடம் எங்குமே கொடை நகரம் கலைவலார் மறையவர் கருத்தில் எண்ணிய(து) இலையெனா(து) அரும்பொருள் யாவும் எய்தலால் மலைவிலா(து) அருளிய வள்ளி யோரினும் தொல விலாப் பெரும்புகழ் படைத்த தொன்னகர் பHொன்னகரம் தோரணத் தொடும் கொடிக்காடு துன்னலால் வாரண மதமலை மலிந்து நிற்றலால் காரணத் தொடும்வர வாறு காணலால் பூரணப் புவியெனப் பHொலிந்த பHொன்னகர் மனைநகரம் சுதையொளி மேனிலை துலங்கித் தோன்றல ல் புதுமலர்த் தெருத்தொறும் சிந்திப் பHொங்கலால் எதிர்பணிந்(து) இடுவிருந்து இனிதின் நல்கலால் வதுவையின் மனையென இருந்த மாநகர் மாநகரம் உறுபகை வறுமைநோய் ஓட ஓட்டிமேல் குறைவற மனுமுறைக் கோன்(ந) டாத்திநீள் நிறைதரு பெரும்புகழ் நிலைநி றுத்தியோர் மறுவிலாத அரசென இருந்த மாநகர் ஒண்ணகரம் தெண்டிரை ஆரமும் பூணுஞ் சிந்தலால் விண்டுபற் பலபல மொழிவி ளம்பலால் மண்டிய வளந்தலை மயங்க லால்மது உண்டவர் எனமதர்த்(து) இருந்த ஒண்ணகர்