📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 104question

தமிழகக் கல்வி வரலாறு

Chapter 2: Front Matter · Tamil

தமிழகக் கல்வி வரலாறு XI Std Tamil சுதந்திரத்தினால், தமிழ்நாடெங்கும் தமிழே ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் சமயம், வாணிகம் போ ன்ற எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கி வந்தது” என்னும் மா. இராசமாணிக்கனாரின் கருத்து, தமிழகத்தில் அன்று நிலவிய கல்விமுறையின் சிறப்பினை எடுத்துக் கூறுகிறது. சங்கம் என்ற அமைப்பு, பலர் கூடி விவாதிக்கும் பாங்குடையது. இதுதவிர, மன்றம், சான்றோர் அவை, அறங்கூர் அவையம், சமணப்பள்ளி, பெளத்தப் பள்ளி போ ன்ற அமைப்புகள் சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் கற்பித்தல் பணியைத் தமிழகத்தில் செய்து வந்துள்ளன.

மன்னராட்சிக் காலத்தில் போர்ப்பயிற்சிகள த் தருவதும் முக்கியமான கல்வியாகக் கருதப்பட்டது. கற்பிக்கும் ஆசிரியர்களும் மூவகைப் பிரிவினராக இருந்தனர். இவர்களிடம் கற்ற மாணவர்களை முறையே சிறுவன், மாணவன், கேட்போன் என்று வகைப்படுத்தினர். கல்வி கற்பிக்கப்படும் இடங்களைப் ‘பள்ளி’ என்று பெரிய திருமொழியும் ஓதும் பள்ளி என்று திவாகர நிகண்டும் கல்லூரி என்று சீவக சிந்தாமணியும் குறித்துள்ளன.

கற்றலுக்கு உதவும் ஏட்டுக் கற்றைகளை ஏடு, சுவடி, பொத்தக ம், பனுவல், நூல் எனப் பல பெய ரிட்டு அழைத்தனர். முன்மூன்றும் ஓலைக்கற்றையையும் பின்னிரண்டும் உட்பொருளையும் சிறப்பாகக் குறித்தன. சமண, பெளத்தப் பள்ளிகள் கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் ஆகிய நான்கு கொடைக ளும் சமண சமயத்தின் தலையாய அறங்களாகும். சமணத்தைச் சேர்ந்த திகம பரத் துறவிகள் மலைக்குகையில் தங்கினர்.

அவர்கள் தங்களின் தங்குமிடங்களிலேயே கல்வியையும் சமயக் கருத்துகள யும் மாணவர்களுக்குப் கற்பித்தனர். ‘பள்ளி’ என்ற சொல்லுக்குப் ‘படுக்கை’ என்று பொ ருள். அவர்களின் படுக்கைகளின் மீது மாணவர்கள் அமர்ந்து கற்றதனால் கல்விக்கூடம், பள்ளிக்கூடம் என அழைக்கப்படலாயிற்று. பள்ளி என்னும் சொல் சமண, பெளத்த சமயங்களின் கொடைய கும்.

சமணப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கைகள பற்றித் திருச்சி மலைக்கோட டையிலும் தமிழகத்தின் புகழ்பெற்ற சமணக் குன்றான கழுகுமலையிலும் உள்ள கல வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பள்ளிகள் கலைகள், கல்வி பHோன்றவற்றைக் கற்பிக்கும் இடங்களாக விளங்கின. மன்றம் கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாகத் திகழ்ந்தது. சான்றோர் அவை செயல்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் அவையாக இருந்தது.

கணக்காயர்எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் (நிகண்டு) கணக்கும் கற்பிப்போர். ஆசிரியர் பிற்காலத்தில் ஐந்தாக விரிக்கப் பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர். குரவர் சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர். XI Std Tamil வந்தவாசி அருகிலுள்ள வேடல் என்னும் ஊரில் இருந்த சமணப் பள்ளியில் பெண் சமண ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தார்.

பட்டினிக்குரத்தி என்னும் சமணப் பெண் ஆசிரியர் விளாப்பாக்கத்தில் சமணப் பள்ளியொன்றை நிறுவியிருந்தார். இவை, சமணப் பள்ளிகளில் பெண்க ளும் ஆசிரியர்களாக இருந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றன. பெண்க ளுக்கெனத் தனியாகக் கல்வி கற்பிக்கும் சமணப் பள்ளிகள் பெண் பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன. தமிழர்கள் இன்று பரவலாக ஏற்றுக்கொ ண்டிருக்கும் பட்டிமண்டபம் என்ற கலை வடிவம் சமயத் துறையிலிருந்து தோன்றியது.

பட்டிமண்டபம் என்பது சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடமென்று மணிமேகலை யில் சுட்டப்படுகின்றது. ‘ஒட்டிய சமயத்து உறுபொ ருள்வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என்று அந்நூல் பேசுகிறது. தமிழகத்திலுள்ள காஞ்சிபுரத்திற்கு வந்த சீனப்பயணி யுவான் சுவாங் , அங்கிருந்த பெளத்தப் பல்கலைக்க ழகத்தில் தங்கிச் சிறப்புரை ஆற்றியிருக்கிறார் என்ற செய்தி பெளத்தமும் சமணமும்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →