📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 162question

காலத்தை வென்ற கலை · Part 4

Chapter 2: Front Matter · Tamil

இங்கே பாரேன், கோவிலைக் கட்டிய தச்சர்களின் பெயர்களைப் கற்பவை கற்றபின்... . அருகிலுள்ள கோவில் சிற்பங்கள், கோபுரங்கள் குறித்த சிறப்புத் தகவல்களைத் திரட்டிப் படங்களுடன் தொகுப்பேடு உருவாக்குக. .

‘தட்சிண மேரு‘ – குறித்துப் பாடத்தில் சொல்லப்படாத பல்வேறு தகவல்களைத் திரட்டி வகுப்பில் கலந்துரையாடுக. கோவிலை எடுப்பித்தவர்கள் பற்றிய கல்வெட்டில், “நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்தக் கல்லிலே வெட்டி அருள்க....” என்று கோவில் கட்ட உதவியவர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். தான் மட்டுமே பங்களிக்காமல் மற்றவர்களின் உதவியையும் பெற்றதோடு அதனைக் கல்வெட்டாகவும் ஆவணப்படுத்தியிருக்கும் இராசராசனின் பாங்கு போற்றத்தக்கது. தனக்கு அடுத்தபடியான இடத்தைத் தன் தமக்கை குந்தவை தேவிக்கு (அக்கன்) அளித்துள்ளார்.

அடுத்து, பெண்டு என்னும் சொல்லால் அவருடைய மனைவியர் கொடுத்த கொடையைக் குறிப்பிடுவதோடு கொடுப்பார் கொடுத்தனவும் என்று சொல்வதன் மூலம் இராசராசன், மற்றவர்களின் கொடையையும் உலகம் அறியும்படி செய்துள்ளார். பொறிச்சிருக்காங்க. வீரசோழன் குஞ்சரமல்லன் இராசராசப் பெருந்தச்சன், மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன், இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன். எடுப்பித்தவன் பெயர் மட்டுமே பொறிக்கப்படும் நிலையில், தச்சர்களின் பெயரும் இந்த அழியாக் கோவிலில் பதித்திருப்பது மேலும் ஒரு புதுமை.

கதிர் : ஆமாம் நிலா. இந்த வாரம் நம்முடைய வலைத்தளத்தில் தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றி விரிவான கட்டுரையையும் படங்களையும் பதிவேற்றுவோம். XI Std Tamil ஆத்மாநாம், கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்த குரலில் பேசியவர். கவிதை பாடுதலைச் சமூக அக்கறையாக மாற்றிக்கொண்டவர்.

இக்கவிதையில் அணிலையும் புளியமரத்தையும் காட்சிப்படுத்தி நம்முடன் உரையாடுகிறார். கேள்வி காலை எழுந்ததும் இரை தேடத் துள்ளும் இவ்வணில் இரவு எங்கே உறங்குகிறது மலர்க்கிளைப் படுகையிலா ஆற்றுமணற் சரிவிலா சதுர வட்டக் கோண மயக்கச் சந்து பொந்துகளிலா நிச்சயம் நூற்றுக்கணக்கில் இருக்கும் இவ்வணில்கள் ஒன்றல்ல தம் குழந்தைத்தனமான முகங்களுடன் சிறு பிள்ளைக்கைகளுடன் அனுபவித்து உண்ணும் இவை தங்களைப்பற்றி என்ன கனவு காணும் உணவையும் உறக்கத்தையும் தவிர. ஒரு புளியமரம் ஒரு புளியமரம் சமீபத்தில் என் நண்பனாயிற்று தற்செயலாய் அப்புறம் நான் சென்றபோது நிழலிலிருந்து ஒரு குரல் என்னைத் தெரிகிறதா நினைவிருக்கிறதா அன்றொரு நாள் நீ புளியம்பழங்கள் பொறுக்க வந்தபோது என் தமக்கையின் மடியில் அயர்ந்து போனாய் அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே உன் முகத்தில் உடலில் எங்கும் வா எப்படியும் என் மடிக்கு. கற்பவை கற்றபின்...

மதுசூதனன் என்ற இயற்பெயரைக்கொண்ட ஆத்மாநாம் தமிழ்க்கவிதை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர். காகிதத்தில் ஒரு கோடு அவருடைய முக்கியமான கவிதைத் தொகுப்பு. ‘ழ’ என்னும் சிற்றிதழை நடத்தியவர். கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று மூன்று தளங்களிலும் இயங்கியவர்.

இவருடைய கவிதைகள் ஆத்மாநாம் கவிதைகள் என்னும் பெயரில் ஒரே தொகுப்பாக்கப்பெற்றுள்ளன. நூல்வெளி உங்களுக்குப் பிடித்த கவிதை ஒன்றைப் படித்து அதன் நுட்பத்தை வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →