📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 168grammar_exercise

ஆத்மாநாம் கவிைதகள்

Chapter 2: Front Matter · Tamil

ஆத்மாநாம் கவிைதகள் XI Std Tamil குறவஞ்சி என்பது ஒரு வகை நாடக (opera) இலக்கிய வடிவமாகும். இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. பாட்டுடைத் தலைவன் உலா வரக்கண்ட தலைவி, அத்தலைவன் மீது காதல்கொள்ள, குறவர் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தலைவிக்குக் குறிகூறிப் பரிசில் பெறும் செய்திகளைக் கூறுவதால் குறவஞ்சி என்னும் பெயர் பெற்றது. இது குறத்திப்பாட்டு என்றும் வழங்கப்படுகின்றது.

பரிசில் பெற்றுவரும் சிங்கிக்கும் சிங்கனுக்கும் இடையிலான உரையாடல் சுவைமிக்கது. சிங்கனுக்கும் சிங்கிக்கும் உரையாடல் கண்ணிகள் சிங்கன் : இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல் எங்கே நடந்தாய் நீ சிங்கி? (எங்கே) சிங்கி :  கொத்தார் குழலார்க்கு வித்தாரமாகக் குறிசொல்லப் போனனடா சிங்கா! (குறிசொல்ல) சிங்கன் : பார்க்கில் அதிசயம் தEோணுது சொல்லப் பயமா இருக்குதடி சிங்கி!

(பயமா) சிங்கி :  ஆர்க்கும் பயமில்லை தEோணின காரியம் அஞ்சாமல் சொல்லடா சிங்கா! (அஞ்சாமல்) சிங்கன் :  காலுக்கு மேலே பெரிய விரியன் கடித்துக் கிடப்பானேன் சிங்கி? (கடித்து) சங்க இலக்கியங்கள் வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனிமனிதர்களைப் பாடின. சமய நூல்கள் கடவுளரைப் பாடின சிற்றிலக்கியங்கள் கடவுளரோடு மனிதர்களையும் பாடின.

அவற்றுள் இயற்றமிழின் செழுமையையும் இசைத்தமிழின் இனிமையையும் நாடகத்தமிழின் எழிலினையும் ஒருங்கேகொண்டு முத்தமிழ்க் காவியமாகத் திகழ்வது குற்றாலக் குறவஞ்சி. சிங்கி :  சேலத்து நாட்டில் குறிசொல்லிப் பெற்ற சிலம்பு கிடக்குதடா சிங்கா! (சிலம்பு) சிங்கன் :  சேலத்தார் இட்ட சிலம்புக்கு மேலே திருகு முறுகு என்னடி சிங்கி? (திருகு) சிங்கி : கோலத்து நாட்டார் முறுக்கிட்ட தண்டை கொடுத்த வரிசையடா சிங்கா!

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →