📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 112question

சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல்

Chapter 2: Front Matter · Tamil

சிறப்புப் பாயிர உரைவிளக்கப் பாடல் XI Std Tamil இலக்கணக்குறிப்பு அறிதல், பHோற்றல், நினைத்தல், கேட்டல், பயிறல் – தொழிற்பெயர்கள்; நனிஇகக்கும் - உரிச்சொற்றொடர் பகுபத உறுப்பிலக்கணம் விடுத்தல் – விடு + த் + தல் விடு – பகுதி; த் – சந்தி; தல் – தொழிற்பெயர் விகுதி. அறிந்து – அறி + த்(ந்) + த் + உ அறி – பகுதி. த் - சந்தி, ந் ஆனது விகாரம் த் – இறந்தகால இடைநிலை உ – வினையெச்ச விகுதி. புணர்ச்சி விதி இழுக்கின்றி – இழுக்கு + இன்றி உயிர் வரின் உக்குறள் மெய் விட்டோடும் – இழுக்க் + இன்றி உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – இழுக்கின்றி.

முறையறிந்து – முறை + அறிந்து இ ஈ ஐ வழி யவ்வும் – முறை + ய் + அறிந்து உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - முறையறிந்து. கற்பவை கற்றபின்... நமக்குக் கிடைக்கும் தமிழ் நூல்களில் காலத்தால் பழமையான இலக்கணநூல் தொல்காப்பியம். இதன் ஆசிரியர் தொல்காப்பியர்.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பHொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது இயல்களாக மொத்தம் இருபத்தேழு இயல்கள் உள்ளன. தொல்காப்பியத்திற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவர்களுள் பழமையான உரையாசிரியர்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், சேனாவரையர், தெய்வச்சிலையார், பேராசிரியர் ஆகியோர் ஆவர்.

நச்சினார்க்கினியரின் சிறப்புப்பாயிர உரைவிளக்கத்தில் உள்ள பாடல் பாடமாக இடம் பெற்றுள்ளது. நூல்வெளி தொல்காப்பியம் முதல் பதிப்பு ( ) முகப்புப் பக்கம் தொல்காப்பியம் குறித்து நீங்கள் அறிந்த செய்திகளைத் தொகுத்து ஒப்படைவு உருவாக்குக. XI Std Tamil . .

, மு.ப. அன்புசால் அப்பாவிற்கு, கடிதம் எழுதுவதே மறந்துபோன இன்றைய சூழலில் அத்தனையும் பேசிவிட முடியாத காலப்பெரு இடைவெளியில் இதை எழுதுகிறேன். இப்பொழுது மின்னஞ்சல் வசதி இருப்பதால் கடிதத் தொடர்பில் ஏற்பட்ட பெரும் இடைவெளி குறைந்தது. சிறுவயதில் எனக்குப் பாரதியின் கவிதைகள அறிமுகப்படுத்தியவர் நீங்கள்தாம்.

‘மகாகவி என்ற பேரொளியில் பாரதியின் பல பரிமாணங்கள் மறைந்துள்ளன’ என நீங்கள் அடிக்கடி கூறுவீர்கள். அண்மைக்காலமாக, பாரதியின் இதழியல் பணி பற்றிய நூல்கள ப் படித்து வருகின்றேன். இதைத் தங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இம்மின்னஞ்சல். ஆம் அப்பா, நீங்கள் கூறியதுபோல பாரதி கவிஞர் மட்டுமல்லர், சிறந்த பேச்சாளர்; பாடகர்; கட்டுரையாளர்; கதை ஆசிரியர்; மொழிபெய ர்ப்பாளர்; அரசியல் அறிஞர்; ஆன்மிகவாதி.

இவை அனைத்திற்கும் மேலாக மிகச்சிறந்த இதழாளர் என்பதை அறிந்தபொழுது நான் பாரதியை எண்ணி எண்ணி வியந்தேன். அப்பா, எட்டையபுரம் சமஸ்தானத்தின் பணிக் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறிய பாரதி, மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். அங்கிருந்து வெளியேறிய அவர், சுதேசமித்திரன் இதழில் உதவி ஆசிரியராகப் பொறுப்பேற்றார். பாரதியின் உலகள விய பார்வை கூர்மைப்பட இதழியல் பணியே தூண்டுகோலாக இருந்திருக்கவே ண்டும்.

இதழியல் துறைக்குப் பாரதி வந்தது சாதாரண நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அதில் அசாதாரணமானவற்றை நிகழ்த்திக் காட்டினார். சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, பாலபாரதி (யங் இந்தியா), விஜயா, சூர்யோதயம், கர்மயோகி ஆகிய பல இதழ்களில் ஆசிரியராகவும் துணையாசிரியராகவும் பங்காற்றிய அவரை நாம் இதழாளராகக் கொண்டாடத் தவறிவிட்டோம். அப்பா, பாரதியை எண்ணும்போதெல்லா ம் நாட்டின் முன்னேற்றத்தில் எனது கல்வி என்பது பள்ளியில் அல்லது கல்லூரியில் மட்டும் பெறப்படுவதன்று.

கல்வி கற்பவர், இதழ்களிலும் நடைமுறை அறிவைப் பெறுவதுடன் அதற்கேற்ப வாழவும் முனைகின்றனர். இவ்விதழ்களின் ஆசிரியர்கள் சமூகத்திற்குத் தேவையான பாடங்களை முன்வைக்கின்றனர். சிறந்த பத்திரிகையாளன் ‘நல்ல ஆசான்’ என்பதில் ஐயமில்லை. பாரதியும் இதற்கு விலக்கன்று.

செம்மொழியாகத் திகழும் நம் மொழி புதிய நடையும் புதிய உடையும் புதிய பHொருளும்கொண்டு எழுச்சியுடன் திகழக் காரணமாக அமைந்த தமிழ்ச்சிற்பி பாரதியின் மற்றொரு பரிமாணம் இதழியல் பணி.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →