📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 123question

நம்மை அளப்போம்

Chapter 2: Front Matter · Tamil

நம்மை அளப்போம் XI Std Tamil . “ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல்” - இடஞ் சுட்டிப் பொருள் விளக்குக. . சின்னதொரு துண்டைத் திரும்பத் திரும்பக் கட்டி அழகு பார்க்கிறாள் செல்ல மகள் முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொள்கிறாள் ஒரு குட்டி நாற்காலியே வீடாகிவிடுகிறது துண்டைக் கட்டிக்கொண்டு தாயாகவும் மாறிக்கொள்ள முடிகிறது அவளால்.

துண்டு ஒன்றுதான்… அதுவே அவளது மகிழ்ச்சியும் என் துக்கமும் - இப்புதுக்கவிதையில் வெளிப்படும் கருத்தை ஆராய்ந்து எழுதுக. . உள்ளுறை உவமை, இறைச்சி – எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. நெடுவினா .

பௌத்தக் கல்வி , சமணக் கல்வி, மரபுவழிக் கல்வி முறைகள ல் தமிழகக் கல்வி முறையில் ஏற்பட்ட பல்வே று மாறுதல்கள விவரிக்க. . தலைவியின் இல்லறப் பாங்கினைப் பற்றிச் செவிலித்தாய் நற்றாயிடம் வியந்து கூறுவன யாவை? .

பாரதியின் இதழாளர் முகம் குறித்து நீங்கள் அறிவன யாவை? மொழியை ஆள்வோம் சான்றோர் சித்திரம் ஜி.யு. போப் செந்தமிழ்ச் செம்மல் ‘டாக்டர் ஜி.யு. போப்’, 1839ஆம் ஆண்டில், தென்னிந்தியாவுக்கு வந்தார்.

சென்னையை அடைந்த போப், ‘சாந்தோம்’ என்னும் இடத்தில் முதன்முதலாகத் தமிழ் உரையைப் படித்துச் சொற்பொழிவாற்றினார். ஆங்கிலேயரான அவரின் தமிழுரை கூடியிருந்த தமிழர்களுக்குப் பெருவியப்பளித்தது. தமிழ் மொழியைப் பயிலத்தொடங்கிய சிறிது காலத்திலேயே, ஐரோப்பியரும் படித்துப் பய ன்பெற வேண்டுமென்ற எண்ணத்தில், தமிழ் நூல்கள ஆங்கிலத்தில் மொழிபெய ர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது திருக்குறள் , திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்புகள் சிறப்பு வாய்ந்தவை.

போப் அவர்கள் தஞ்சாவூரில் வாழ்ந்தபோது, தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தெளிவுற அறிந்தார். அப்போதுதான் தொல்காப்பியம், நன்னூல் முதலிய பேரிலக்கண நூல்கள ப் பாடசாலை மாணவர் படிப்பது எளிதன்று என்பதைக் கண்டு, சிறிய தமிழ் இலக்கண நூல்கள் சிலவற்றை எழுதி வெளியிட்டார். ஐரோப்பியர், தமிழ் மொழியைக் ஜி.யு. போப் ( - ) XI Std Tamil கற்றுக் கொள்வ தற்குரிய நூல் ஒன்றை (Tamil Hand Book) எழுதினார்.

ஆங்கில மொழியில் எழுதப் பெற்றிருந்த தமிழ்நாட்டு வரலாற்றை, தமிழில் எழுதிப் பதிப்பித்தார். பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறைக் கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகைய கல்வியே பய னளிக்குமென்றும் போப் கருதினார். எழுபது ஆண்டுகள் தமிழோடு வாழ்ந்திருந்து, தமிழுக்கு நலம் செய்த பெரியார் ஜி.யு. போப் ஆவார்.

கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை தருக: . இலக்கணக் குறிப்புத் தருக. அ) பிறந்தார் ஆ) அருளிய . திருக்குறளை ஐரோப்பியரும் படித்துப் பய ன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில், அதை ஆங்கிலத்தில் மொழிபெய ர்த்தவர் ஜி.யு.

போப் – விடைக்கேற்ற வினாவை எழுதுக. . பதிப்பித்தார் – பகுபத உறுப்பிலக்கணம் தருக. .

வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக. பள்ளிகூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துத் துறை கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகையக் கல்வியேப் பய னளிக்குமென்றும் போப் கருதினார். . பொருத்துக.

அ) தொல்காப்பியம் - i) சங்க நூல் ஆ) திருக்குறள் - ii) பக்தி நூல் இ) புறநானூறு - iii) அற நூல் ஈ) திருவாசகம் - iv) இலக்கண நூல் செய்திக்குக் கீழுள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை மொழிபெயர்ப்புப் பகுதியிலிருந்து கண்டறிந்து எழுதுக. The Chinese have no

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →