தமிழில் வேர்ச்சொல் ஆய்வின் தEோற்றம் தமிழின் முழுமுதல் இலக்கணநூல், தEொல்காப்பியம். இந்நூலில், வேர்ச்சொல் ஆய்வுக்கான பல தரவுகள் உள்ளன. தEொல்காப்பிய உரியியல் பகுதிகள் பல வும் இச்செய்திகள் கொண்டவை. ‘அமர்தல் மேவல்‘ என்பது, ஓர் உரியியல் நூற்பா.
அமர்தல் என்னும் சொல்லிற்குப் பொருந்துதல் என்பது பொருள். அமர்தல் சொல்லின் அடிப்பகுதி, ‘அம்‘ என்பதாகும். இதன் அடிப்படையிலேயே ஒன்றோடொ ன்று பொருந்தி வளரும் மூங்கில் அம் – அமை எனப்பட்டது. ‘ஆடமை புரையும் வனப்பில் பணைத்தோ ள்‘ என்ற குறுந்தொகைப் ( ) பாடலில் ஆடுகின்ற மூங்கில், (ஆடு + அமை ) ஆடமை எனப்பட்டது.
சோற்றுஉருண்டையைக் குறிக்கும் ஒரு தமிழ்ச்சொல், ‘அமலை‘. இச்சொல்லும் அம் – அமல் – அமலை எனப் பல சோற்றுப் பருக்கைகள் பொருந்தியதால் தEோன்றிய பெயரேயாகும். இரு நாட்டுப் படை வீரர்கள் திரண்டு நின்று போர் செய்தலை ‘அமர்‘ எனவும், போர் நிகழும் இடம் – அமர்க்களம் எனவும் அழைக்கப்படும். இங்கு வந்த ‘அமர்‘ சொல்லும் 12th Std - Advance Tamil - Chaper - - :