கதையியல் தமிழ் இலக்கியங்கள் தEொடக்ககாலத்தில் கவிதை வடிவங்களாகவே வெளிப்பட்டன. அக்காலகட்டத்தில் குறிப்பிட்ட செயல் அல்லது நிகழ்வைக் கதையாக்கிப் பேசும் வழக்கம் இருந்தது. பேச்சு வழக்கில் இருந்த கதைகள் எழுத்தாகப் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்பட்டபோதும் அவை செய்யுள் வடிவிலேயே இருந்தன. பேச்சு மொழியிலும் உரைநடையிலும் இலக்கியங்களைப் படைக்கலாம் என்னும் நிலை ஐரோப்பியர்களின் வருகைக்குப்பின் தEோன்றியது. அவர்களின் நடையை உள்வாங்கித் தமிழில் புனைகதைகள் படைக்கப்பட்டன. இப்பாடப்பகுதியில் தமிழ்ப்புதினங்களின் தEோற்றம், வளர்ச்சி குறித்து விளக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடையே புதினம் எழுதும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அதன் அமைப்புமுறை, வடிவம், உத்திகள் போன்ற கூறுகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இப்பகுதியில் மாணவருக்கு மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தும் புதினம், குறும்புதினம், சிறந்த புதினங்கள் சிலவற்றின் பகுதிகள், இந்தியமொழிப் புதினம், உலகமொழிப் புதினம் ஆகியன தரப்பட்டுள்ளன.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 55poem
கதையியல்
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →