ஒரு பொருளுக்கு ஒரு சொல் ஒரு பொருளை உணர்த்த, ஒரு சொல்லே போதுமானது. அவ்வாறின்றி ஒரு பொருளைக் குறிக்க, இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சொற்கள் இருக்குமானால், ஒன்று நிலைபெற மற்றவை வழக்கிழக்கும். எடுத்துக்காட்டாக, ‘வீடு‘, ‘இல்‘, ‘மனை‘ போன ற சொற்கள் ‘இல்லம்‘ (வீடு) என்னும் ஒரே பொருளைக் குறித்தன. இப்போதைய வழக்கில் ‘இல்‘ என்னும் சொல்லை, இலக்கியத்தில் மட்டுமே காணமுடிகிறது.
‘மனை‘ என்னும் சொல்லோ, ‘வீடு கட்டுவதற்குரிய இடம்‘ என்னும் பொருளைத் தருகிறது. பேச்சுவழக்கில், ஒருவர் ‘நான் மனை வாங்கியுள்ளேன்‘ என்று கூறினால், அவர் வீடு வாங்கியுள்ளதாகப் பொருளன்று, வீடு கட்ட இடம் வாங்கியுள்ளார் என்பதையே உணர்த்துகிறது.