(Sociologism) சமுதாயத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளே, இலக்கியங்களின் கருப்பொருளாக அமைகின்றன. அதனால்தான் இலக்கியம் என்பது, ‘வாழ்க்கை நிகழ்வுகளை எதிரொளிக்கும் காலக்கண்ணாடி‘ எனவும் ‘சமுதாயத்தின் புலப்பாடு‘ எனவும் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆகவே, இலக்கியத்தில் பதிவாகும் மக்களின் சமுதாயக்கூறுகளை ஆராய்ந்து தEொகுப்பதே, சமுதாயவியல் அணுகுமுறை. சமுதாயப் பின்னணி அல்லது களம், சமுதாய நிறுவனங்கள், குடும்பம் அதன் வகைகள், சமூக உறவுகள், கிராம நகர வாழ்க்கை, இனம்.
ஊர், நம்பிக்கைகள், சமூக மதிப்புகள், ஒழுக்கம் முதலான நற்பழக்கங்கள், நீக்கவேண்டிய தீய பழக்கங்கள், சமுதாயச்சிக்கல்கள், சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள் முதலியன சமுதாயவியல் அணுகுமுறை சார்ந்து ஆராயப்படுகின்றன. தமிழ்ச் சமூக வரலாற்றுக்குக் குறிப்பாகப் பழந்தமிழ்ச் சமூகத்தை அறிந்துகொள்ள, சமுதாயவியல் அணுகுமுறைகள் உதவுகின்றன. இவ் அணுகுமுறைகள்