உ) பேச்சுச் சூழல் இது, பொ ருள் மயக்கம் கொண்ட மொழிக்கூறுகளைச் சார்ந்தது. அதனால், அதனதன் பொருள்களைத் தனித்தனியாகப் பிரித்துப் பொ ருள் உணரவேண்டும். இதனைப் பேச்சுநடை, வட்டாரவழக்கு, கதைநடை, கவிதைநடை போன ற பல்வேறு மொழிக்கூறுகளில் உணரலாம். எடுத்துக்காட்டாக, நான் மதுரை என்னும் தEொடர் பொருள் தெளிவில்லாமல், . நான் மதுரையைச் சார்ந்தவன் . நான் மதுரைக்குப் போகிறவன் . நான் மதுரையிலிருந்து வருபவன் எனப் பல பொ ருள்களைத் தரக்கூடிய வகையில் உள்ளது. இப் பொருள் மயக்கங்கள் பேச்சுச் சூழலினால் தெளிவுபடும். அதாவது நடத்துநரிடம், பயணி தான் போகவேண்டிய இடத்தைக் குறிப்பிடும்போதும், தான் எங்கிருந்து வருகிறேன் என்பதைக் குறிப்பிடும்போதும், தன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரிடம் தன் சொந்த ஊர் இன்னதென்பதைச் சுட்டிக்காட்டவும் எனப் பல நிலைகளில் ”நான் மதுரை“ என்னும் தEொடர் பயன்படுகிறது. இவ்வாறு பொ ருண்மை சுட்டல், வெளிப்படையாகவும் அமையலாம். குறிப்பாகவும் அமையலாம். குறிப்பாக அமையும்போது, அது சொற்பொருள் மாற்றத்திற்கு வழிவகை செய்கிறது.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 186poem
உ) பேச்சுச் சூழல்
Chapter 69: படிப்போம் பயன்படுத்துவPோம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →