📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 204poem

இதழ்கள்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

இதழ்கள் 1882இல் ஜி.சுப்பிரமணியம் என்பவரால் வார இதழாகத் தொடங்கப்பெற்ற “சுதேசமித்திரன்“ -இல் நாளிதழாக மாறியது. -இல் மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் துணையாசிரியராகச் சேர்ந்தார். தமிழக மக்க ளின் துயில் நீக்க, புரட்சிகரமான கருத்துகளாலும் சுவைமிகு உரைநடையாலும் சுதேசமித்திரன் புதுப்ப லிவோடும் வலுவோடும் வெளிவந்தது. மகாகவி பாரதியார், -இல் “இந்தியா“ என்ற தமிழ் மாத இதழையும், “பால பாரதம்“ என்ற ஆங்கில வார இதழையும் தொடங்கினார். இதன்மூலம் நாட்டு மக்களிடையே விடுதலை உணர்வை வளர்த்தார். -இல் திரு.வி.க. அவர்கள் “தேசபக்தன்“ என்னும் நாளிதழைத் தொடங்கினார். சுதேசமித்திரனுக்குப் பிறகு தமிழ் மண்ணில் விடுதலை வேட்கையின் வித்தாய் விளங்கிய இதழ் இதுவே. இதைத் தொடர்ந்து நவசக்தி, திராவிடன், தமிழ்நாடு, ஜெயபாரதி, சுதந்திரச்சங்கு, ஜனசக்தி போன்ற இதழ்களும் தோன்றி மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தின.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →