- பிரமிள் இறகுகளின் தொகுதியைச் சிறகு என்பர். சிறகிலிருந்து பிரிந்த இறகு, நிலத்துக்கும் வானுக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழும் காற்றின் தீராத தழுவல்களால் மண்ணில் வீழாது தன் வாழ்வை எழுதுகிறது. வாழ்வு என்பது காவியத்துக்கான பொதுவான பாடுபொருள். XI Std Tamil வடகரை நாடு மலரில் ஆரளி இந்துளம் பாடும் மடைஇ டங்கணி வந்துளம் ஆடும் சலச வாவியில் செங்கயல் பாயும் தரளம் ஈன்றவெண் சங்கயல் மேயும் குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும் குடங்கை ஏற்பவர் செய்யெனச் செய்யும் புலவர் போற்றும் திருமலைச் சேவகன் புகழ்வட ஆரி நாடெங்கள் நாடே.
உழவர், உழத்தியரின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் நயம்பட வெளிப்படுத்துவதே பள்ளுச் சிற்றிலக்கியத்தின் உட்கோளாகும். ‘நெல்லு வகையை எண்ணினாலும் பள்ளு வகையை எண்ண முடியாது’ என்பர். வேளாண்மை இலக்கியமான பள்ளு, அரிய பல செய்திகளின் கருவூலமாக விளங்குகிறது. தென்கரை நாடு வளருங் காவில் முகில்தொகை ஏறும்- பொன் மாடம் எங்கும் அகிற்புகை நாறும் குளிரும் மஞ்ஞையும் கொண்டலும் காக்கும் கோல்முறை மன்னர் மண்டலங் காக்கும் இளமின் னார்பொன் னரங்கில் நடிக்கும்-முத்(து) ஏந்தி வாவித் தரங்கம் வெடிக்கும் அளியுலாம் கொன்றை சூடுங் குற்றாலத்- தென் ஐயன்தென் ஆரி நாடெங்கள் நாடே.
-பெரியவன் கவிராயர் சொல்லும் பொருளும் ஆரளி - மொய்க்கின்ற வண்டு, இந்துளம் - இந்தளம் எனும் ஒரு வகைப் பண், இடங்கணி - சங்கிலி, உளம் - உள்ளான் என்ற பறவை, சலச வாவி - தாமரைத் தடாகம், தரளம் - முத்து, வட ஆரிநாடு - திருமல . கா - சோலை, முகில்தொகை - மேகக் கூட்டம், மஞ ஞை - மயில், கொண்டல் - கார்கால மேகம், மண்டலம் - உலகம், வாவித் தரங்கம் - குளத்தில் எழும் அலை, அளியுலாம் - வண்டு மொய்க்கின்ற, தென் ஆரிநாடு - குற்றாலம்.