📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 76question

குறுந்தொகை

Chapter 2: Front Matter · Tamil

குறுந்தொகை XI Std Tamil தரப்பைத் தலைவியின் பெற் றோர் ஏற்றுக்கொண்டனர் என்று தேற்றுகிறாள். ச@ொல்லும் பொருளும் சிதவல் - தலைப்பாகை, தண்டு - ஊன்றுகோல் பாடலின் பொருள் ( ஊர் மக்களின் அவையில் முன்பு பல முறை தலைவனின் பரிசப் பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டன. ) “ தலைவி! இன் றோ தலைப்பாகை அணிந்து கையில் தண்டுடன் இருக்கும் முதியவர்கள் மூலமாகத்தல வன் ( போ துமென்று சொல்லத்தக்க அளவு பரிசப் பொருட்களைக் கொண்டுவந்து அவைமுன் வைத்துள்ளான்) மணம் பேச ச் செய்துள்ளான்.

அவையில் இருந்த தலைவியின் உறவினரும் கண்டு, ‘நன்று நன்று’ என்று கூறி மகிழ்ந்தனர். நம்முடைய ஊரில் முன்பெல்லா ம் பரிசத்தொகை போதவில்லை என்பதற்காகப் பிரித்துவிடப்பட்ட தலைவன் தலைவியரைச் (போ திய பரிசத் தொகை கிடைத்தவுடன்) சேர்த்து வைப்போர் இருந்தனர்தானே?” என்று தோழி கூறுகிறாள். இப்பாடல் நேரிசை ஆசிரியப்பா வகையை ச் சார்ந்தது. இலக்கணக்குறிப்பு பிரிந்தோர் -  வினையாலணையும் பெயர் நன்றுநன்று - அடுக்குத்தொடர் பகுபத உறுப்பிலக்கணம் பிரிந்தோர் - பிரி + த்(ந்) + த் + ஓர் பிரி - பகுதி த் - சந்தி ‘ந்’ ஆனது விகாரம் த் - இறந்தகால இடைநிலை ஓர் - பல ர்பால் வினைமுற்று விகுதி புணர்ச்சி விதி தண்டுடை - தண்டு + உடை உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும் தண்ட் + உடை உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.

தண்டுடை குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. கடவுள் வாழ்த்து நீங்கலாக, அகத்திணை சார்ந்த பாடல்களை உடையது. “நல்ல குறுந்தொகை” எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. உரையாசிரியர்கள் பல ராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்.

ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். வெள்ளிவீதியார் சங்ககாலப் பெண்புலவர்களுள் ஒருவர்.

சங்கத்தொகை நூல்களில் பாடல்கள் இவரால் பாடப்பட்டவை. நூல்வெளி கற்பவை கற்றபின்... திருமணங்களில் மணக்கொடை கேட்பது குற்றமே - விவாதிக்க. XI Std Tamil கிடைத்திருப்பதென்னவோ அரிய அமிழ்தம்!

அதனால் என்ன தனித்துண்ணத் தகுமIோ? எமக்கது பெரிதில்லை எவரிடத்தும் வெறுப்பில்லை ச@ோம்பல் சுயமழிக்கும் உயர்ந்தோர் அஞ்சுவது அஞ்சுவர் தாமும் புகழா இதEோ எம் உயிர். இகழா பூமிப்பரிசும் பொருட்டில்லை. எமக்குள்ளிருப்பது குறுமனம் அன்று பெருமலையெனத் தமக்கென வாழாது பிறர்க்கென வாழும் தகைசால் மாண்பினர் உளதால் அன்றோ இக்கணமும் உயிர்த்திருக்கிறது உலகம்.

திணை : பொதுவியல் திணை வெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளில் கூறப்படாத செய்திகள யும் தமிழரின் வாழ்வியல் கருவூலமான புறநானூறு, வீரத்தையும் ஈரத்தையும் மட்டும் பேசாமல், வாழ்வின் விழுமியங்களையும் பேசுகிறது. பிறர்க்கென வாழ்வதே பிறவிப்பயன் என்ற கருத்தினை விளக்கும் இப்பாடல், தனக்கென வாழா மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்! துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனையர் ஆகித் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.

* ( ) -கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பிற பொதுவான செய்திகள யும் தொகுத்துக் கூறுவது பொதுவியல் திணையாகும். துறை : பொருண்மொழிக்காஞ்சித் துறை மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகள எடுத்துக் கூறுதல் பொருண்மொழிக்காஞ்சித் துறையாகும். ச@ொல்லும் பொருளும் தமியர் - தனித்தவர் ; முனிதல் - வெறுத்தல் ; துஞ்சல் - சோம்பல் ; அயர்வு - சோர்வு ; மாட்சி - பெருமை ; நோன்மை - வலிமை ; தாள் - முயற்சி. பாடலின் பொருள் தமக்காக உழைக்காமல் பிறர்க்காகப் பெரிய முயற்சியுடன் உழைப்பவர்கள், இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும் அஃது உயிர்க்காப்பது என்பதற்காகத் தனித்து உண்ண மாட்டார்கள்; யாரையும்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →