புனைகதை இலக்கியம் - ஓர் அறிமுகம் தமிழ் உரைநடை இலக்கியம் சார்ந்த கோட்பாடுகள் தEொல்காப்பியர் காலம் முதலாகவே இருந்து வந்துள்ளன. பாட்டிடை வைத்த குறிப்பு, உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், உரை வகை என உரைநடை சார்ந்த எண்ணங்களைத் தமிழிலக்கிய வரலாற்றின் காலந்தோறும் கண்டுகொள்ள முடிகிறது. எனினும், மேலை இலக்கியங்களின் தEொடர்புக்குப் பின்தான் தமிழில் முழுமையான உரைநடை இலக்கியங்கள் தEோன்றியுள்ளன. மேலை நாட்டினர் உருவாக்கிய உரைநடை வகையிலான புதினங்களின் தாக்குறவு தமிழிலும் காணப்பட்டது.
ஐரோப்பியர்கள் தங்களின் தE டக்கக் காலப் புதினங்களுக்கு சரித்திரம் என்னும் சொல்லாட்சிகளைப் பயன்படுத்தியது போலவே தமிழ்ப் படைப்பாளிகளும், வரலாறு என்ற சொல்லாட்சியைக் கையாண்டுள்ளனர். புனைகதை வகையில் புதினமும் ஒன்று. இம்மேனாட்டுத் தாக்கம் நமது தEொடக்ககாலப் புதினங்களையும் ஆட் கொண்டது. இவ்வாறு தமிழில் தE ன்றிய தE டக்கக் கால முயற்சிகள் தனிநபர் சார்ந்த வரலாற்று இலக்கியமாக அல்லது அத்தனிநபர் சமூகத்தோடு கொண்ட உறவுகளைப் பேசும் இலக்கியமாகப் புதினங்கள் அமைந்தன.