(Psychoanalyticism) மனித மனம்சார்ந்த பல்வேறு கருத்தாக்கங்களை முன்வைத்து, இலக்கியத்தை அணுகித் திறனாய்வது, உளவியல் அணுகுமுறை. சிக்மண்ட் ஃபிராய்டு என்பவர் உருவாக்கிய உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டின் அடிப்படையில், இவ் அணுகுமுறை மேற்கொள்ளப்படுகிறது. உளவியல் அணுகுமுறையானது, இலக்கியத்தில் சித்திரிக்கப்படும் கதைமாந்தர்களின் மனங்களையும் நடத்தைகளையும் அறியவும் படைப்பாளியின் மனவெளிப்பாடுகளை அறியவும் அவ் இலக்கியத்தைப் படிப்பவர்தம் மனவுணர்களுக்கு ஏற்றவாறு அமைகிற கூறுகளை அறியவும் என மூன்று அடிப்படைகளில் செயல்படுகிறது. எடுத்துக்காட்டாக, மு.
வரதராசனாரின் சில புதினங்களில் காணாமல் போவதாக ஒரு கதைப்பாத்திரம் இடம்பெற்றிருக்கும். காரணம், மு. வ. குழந்தைப்பருவத்தில் காணாமல் போய், பிறகு கண்டுபிடிக்கப்பட்டார் என்பதுதான்.
சிலப்பதிகாரத்தில், கண்ணகி காணும் ‘ தீக்கனவு‘ , அவளுடைய குழப்பமான மனநிலையின் வெளிப்பாடேயாகும். இவ் உளவியல் அணுகுமுறை, இலக்கியக் கதைமாந்தர்களின் மனநிலை தEொடர்பான பல கூறுகளிலும் கவனம் செலுத்துகிறது. ஆகவே, உளவியல் அணுகுமுறையானது, இலக்கியத்தின் புரியாத இடங்களைப் புரிந்துகொள்ளவும், உட்பொருள்களைக் குறிப்பிட்ட ஒரு கோணத்தில் விளங்கிக்கொள்ளவும் பெரிதும் உதவுகிறது.