விளையாட்டு தEொல்காப்பியர் கூறும் உவகை என்னும் மெய்ப்பாடு தE ன்றுவதற்குரிய நால் வகைக் களங்களுள் ஒன்று விளையாட்டு. இதிலிருந்து மன மகிழ்ச்சியை விளைவிக்கும் ஒரு செயலே விளையாட்டு எனக் கருதலாம். விளையாட்டுகளில் ஈடுபடாமல் வீட்டினுள்ளே இருந்தால் உடல்நலமும் மனநலமும் கெடும். வீட்டினுள்ளே அடைந்துகிடப்பது அறமன்று என்பதை நற்றிணைப் பாடல் உணர்த்துகிறது.
விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது இளையோர் இல்லிடத்து இற்செறிந் திருத்தல் அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என குறுநுரை சுமந்து நறுமலர் உந்தி பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே செல்க என விடுநள்மன்கொல்லோ எல் உமிழ்ந்து உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள் கொடி நுடங்கு இலங்கின மின்னி ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே. – நற்றிணை ஆசிரியர்: பிரான்சாத்தனார் திணை: குறிஞ்சி கூற்று: தEோழி கூற்று. பாடல் பொருள்: தலைவனின் உச்சி குன்றில் ஒளியை உமிழ்ந்து வலிய இடி முழங்கும் பாதி இரவாகிய நடுயாமத்தில், கொடிபோல் வளைந்தனவாய் விளங்கும் மின்னலோடு அசைகின்ற மேகங்கள் தங்கியிருத்தலின், அம்மலையிலிருந்து புதுநீர் பொங்கிப் பெருகி வரும். அந்நீரில் விளையாட்டுத் தEோழியருடன் ஓரை என்னும் ஆட்டத தை ஆடாமல் இளமங்கையர் தமது 12th Std - Advance Tamil - Chaper - - :