க்கு முறை தற்போதைய கதைப்போ க்கிற்குக் காரணமாக, ஏற்கெனவே நடந்த ஒன்றைக் காட்டிக் கதையின் வளர்ச்சியை வலிமையாகக் கொண்டு செல்வது. (எ. கா. ) நம் பாடப்பகுதியில் அமைந்துள்ள ஆர்.
சூடாம ணியின் ’இறுக மூடிய கதவுகள்’ கதையில் முன்னர் நடந்த காட்சியாகச் சொல்லப்படும் கீழ்க்காணும் வரிகளைப் பின்னோக்கு முறைக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இளைய அம்மா. பயம் கலந்த ஒரு சந்தோசத்தில் உருவமே வேறாகி, ஒளியால் நிறைந்தது போன்ற அம்மா . அவள் அணைப்பினுள் எட்டு வயது பையன்.
” செல்லப்பா அங்கிளை உனக்குப் பிடிச்சிருக்குதா கேசவா?“ “ஓ, ரொம்பப் பிடிக்குமே” “எனக்கு… எனக்குக் கூட அவரைப் பிடிக்குதுடா கண்ணா!“ “நல்ல அங்கிள் அவரு” “அவரை… அந்த நல்ல அங்கிளை உனக்கு அப்பாவாய்ப் பண்ணட்டுமா?“ பையன் முகத்தில் ஒன்றும் புரியாத வெற்றுப்பார்வை. அது ஒரு தடை என்பதுபோல் அம்மாவின் முகத்தில் கணநேரத் தடுமாற்றம். “என்னம்மா?“ “ அவரை நான் கல்யாணம் செய்துக்கட்டுமா?“ 11th Advance Tamil - - - :