📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 42grammar_exercise

அருணகிரி அந்தாதி

Chapter 56: அந்தாதி · ADVANCED TAMIL

அருணகிரி அந்தாதி செப்பரிய ஞானச் செழுஞ்சுடரே சோணகிரி அப்பனே நன்னூல் அறிந்தாலும் – இப்புவியில் கொண்டகுரு வைப்பொருளாக் கொள்ளார் பயனேது? கண்டவெல்லாம் வீணிலே கற்று. கற்றதனால் தொல்லைவினைக் கட்டறுமோ? நல்லகுலம் பெற்றதனால் போமோ பிறவிநோய் - உற்றகடல் நஞ்சுகந்து கொண்டருணை நாதரடித் தாமரையை நெஞ்சுகந்து கொள்ளா நெறி.

(மேற்கண்ட இரு பாடல்க ளில், முதல் பாடலின் இறுதிச் (அந்தம்) சீராகிய கற்று என்பது, அடுத்த பாடலின் முதல் (ஆதி) சீராக அமைந்து அந்தாதித் தEொடையாக வந்துள்ளது) பாடல் விளக்கம்: உலகில் நல்ல பல நூல்களைத் தெளிவாகக் கற்றுத் தேர்ந்தாலும், தனக்குக் கிடைத்த குருநாதரை மதியாதவருக்கு யாதEொரு பயனுமில்லை. ஈட்டிய செல்வங்களும், துய்த்த இன்பங்களும் எவ்விதப் பயனுமின்றி வீணே கெட்டழியும். எனவே, சொல்லுதற்கு அரிய அறிவுப் பொருளாகவும் சுடராகவும் தந்தையாகவும் விளங்கும் அருணகிரியில் (திருவண்ணாமலை) கோவில் கொண்டுள்ள அண்ணாமலை அண்ணலைக் குருவாகப் போற்றி வாழ்வாயாக! இறைவன் பாற்கடலில் எழுந்த நஞ்சினைத் தனது கண்டத்தில் அடக்கிய கருணையாளன்.

அவனது திருவடியாகிய அருளை நெறியாகக்கொண்டு வாழ வேண்டும். அவ்வாறில்லாமல், எவ்வளவுதான் கற்றாலும், நல்ல குலத்திலே பிறந்தாலும் வினைகள் நீங்கிவிடுமா? இல்லையே!

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →