தஞ்சைவாணன் கோவை பு யலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன் கயலே மணந்த கமலம் மலர்ந்துஒரு கற்பகத்தின் அயலே பசும்பொற் கொடிநின்றதால் வெள்ளை அன்னம்செந்நெல் வயலே தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன் மலையத்திலே பாடல் விளக்கம் : பொதியமலையில் வெள்ளைநிற அன்னப்பறவைகளும் செந்நெல் வயல்களும் பெரிய குளங்களும் சூழ்ந்துள்ளன. அம் மலையின் பக்கத்தில் மிக அழகான பொற்கொடி ஒன்று நிற்பதைக் கண்ட தலைவன் தனக்குள் பேசிக்கொள்கிறான். ”இப்பொற்கொடி கரிய மேகத்தைச் சுமந்துகொண்டும், பிறைநிலவைக் கொண்டும், போரிடும் வளைந்த இரு விற்களைக் கொண்டும், தாமரை மலரில் மீன்களைக் கொண்டும், கற்பக மரத்தின் பக்கத்திலே நிற்கிறதே!” இங்குத் தலைவியின் கூந்தல் மேகமாகவும், நெற்றி பிறையாகவும், புருவம் வில்லாகவும், கண் கயலாகவும், முகம் தாமரையாகவும், முழுத்தோற்றம் பொற்கொடியாகவும் முற்றும் உருவகப்படுத்தி இருப்பது உணரத்தக்கது. இப்பாடல் காட்சி என்னும் துறையில் அமைந்ததாகும்.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 44poem
தஞ்சைவாணன் கோவை
Chapter 60: கோவை · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →