ஒருமறை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் இடம்பெற்றுள்ள அறநூல்கள் ஒவ்வொன்றும் ஒவ் வொரு தன்மையென. மணிமுடியாக விளங்கும் திருக்குறள் உலகம் போற்றும் பொதுமறை. இஃது அறம், பொருள், இன்பம் என்னும் முப் பொருண்மைகளை உடையது. விவிலியத்திற்கு அடுத்தபடியாக உலகின் பெரும்பான்மையான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது. இந்நூலை இயற்றிய திருவள்ளுவரின் முழு வரலாறு கிடைக்கவில்லை. எனினும் இவர் பிறந்த ஆண்டு கி. மு. எனக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு (தி.பி.) கணக்கிடப்படுகின்றது. . வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. . தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. . பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும். . நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். . புறங்குன்றிக் கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து. . மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர். . கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல். . மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். - அதிகாரம்
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 23poem
ஒருமறை
Chapter 23: ஆசிரியர் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →