யசோதர காவியம் இந்நூல் யசோதரன் என்ற மன்னனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இது ஐந்து சருக்கங்களையும் பாடல்களை யும் கொண்டது. அபயருசி என்பான் ஔதய நாட்டு மன்னன் மாரிதத்தனுக்குத் தம் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சமண நெறிப்படுத்தியதே இக்காப்பியக் கதை.
அபயருசி கூறும் அறவுரையின் பயனைக் கீழ்வரும் பாடல் உணர்த்துகிறது. பிறந்தவர் முயற்சி யாலே பெறுபய னடைவ ரல்லா லிறந்தவர் பிறந்த தில்லை யிருவினை தானு மில்லென றறைந்தவ ரறிவி லாமை யதுவிடுத் தறநெ றிக்கட் சிறந்தன முயலப் பண்ணுஞ் செப்புமிப் பொருண்மை - யசோதர காவியம் அபயருசி கூறும் அறவுரையின்படி வாழ்பவர் அதன் பயனாக வீடுபேற்றை அடைவர் என்பது இதன் பொருள்.