சங்கத் தமிழ் அனைத்தும் தா மொழியோடு விளையாடு எண்ணங்களை எழுத்தாக்குக. பாணனின் கோப்பை இப்போது காலியாயிருந்தது தன் உடலிலிருந்து கிள்ளிப் பறித்த பூவைக் குழந்தைக்குத் தந்து வலியில் மூழ்கிய பச்சைத்தாவரத்தின் கண்களில் ஒருதுளி ரத்தம் தேங்கியிருந்தது. சங்கக் கவிதையின் எழுத்தொன்றைத்திறந்து காக்கைப்பாடினி வெளியேவந்தாள். ஆறாம்நிலத்தில் துளிர்த்த அறிவியல்தமிழி நீயென அருகே வந்தவள் முத்தம் தருகையில் பறவை கள் தொலைந்துபHோன பூமியில் குளிரூட்டப்பட்ட அறைக்குள் உட்கார்ந்து கணிப்பொறித்திரையில் என் சின்னமகள் ஒரு காக்கையை வரைந்து கொண்டிருந்தாள் - ஹெச்.ஜி.
ரசூல். இரண்டாயிரமாண்டு நீளமுள்ள கவிதையை ஈன்ற மூதாயியைத் தேடியலைந்த களைப்பில் பறவை ஒருகாலத்தில் தன் தாகம் தணித்த மண்பானையைத்தேடி அல்லலுற்றது. பாடப்புத்தகத்தில் படம்பார்த்துச் சொன்ன கதைக்குள்ளிருந்து நீரூற்று எதுவும் பீறிடவில்லை ஐவகை நிலங்களையும் அலகில் கொத்தி அடைகாக்க இன்னொரு இடமற்றுப் பHோக... நீலவண்ணக் கடற்பரப்பில் அந்தப் பறவை ஒரு முட்டை இட்டது.
அதன் குஞ்சு பHொரிப்பில் ஆயுதமும் புல்லாங்குழல் மறுகையுமாய் அணங்கொருத்தி உதித்தெழுந்தாள். வயல்வெளியெங்கும் சலசலத்துத் திரிந்த மருதயாழின் ஓசை வழிந்தோட கால்கள் சுழன்றாடிய விறலிக் கூத்தின்முன் பிரபஞ்சமே தன்னைப் புனைந்து கொண்டது. XI Std Tamil இடமிருந்து வலம் . மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளைக் கூறும் துறை ( ) .
தேன் – மற்றொரு சொல் ( ) . புல்லின் இதழ்கள் - நூலாசிரியர் ( ) . கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடம் ( ) . சி.சு.
செல்லப்பா நடத்திய இதழ் ( ) . ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பக்தி இலக்கியம் ( ) வலமிருந்து இடம் . யானை – வேறொரு சொல் ( ) .
வந்தவாசிக்கு அருகில் சமணப்பள்ளி இருந்த ஊர் ( ) . உமறுப்புலவரை ஆதரித்தவர் ( ) . கவிஞர் மீரா நடத்திய பதிப்பகம் ( ) மேலிருந்து கீழ் . புதுமைப்பித்தனின் புகழ்பெற்ற சிறுகதை ( ) .
பாரதி நடத்த விரும்பிய கருத்துப்பட இதழ் ( ) . இளையராஜா உருவாக்கிய இராகம் ( ) . நற்றிணை 153ஆவது பாடலை இயற்றியவர் ( ) . அணுவைப்போலச் சிறுத்து நிற்கும் ஆற்றல் ( ) .
இந்தச் சொல்லின் திரிபே சீறா ( ) . மகாபாரதத்தில் கொடை வீரன் ( ) . பாரதிதாசன் நடத்திய இதழ் ( ) கீழிருந்து மேல் . தவறு – வேறொரு சொல் ( ) .
தருமு சிவராம் என்னும் புனைபெயரிலும் எழுதியவர் ( ) . மூங்கில் - மற்றொரு சொல் ( ) . மாணிக்கவாசகர் பிறந்த ஊர் ( ) . ஐங்குறுநூறு பாடும் மலர்களில் ஒன்று ( ) .
மலை என்றும் சொல்லலாம் ( ) . பத்தாம் திருமுறை ( )