சமணம் அனைத்துவிதமான சிறந்த குணங்களைச் செல்வமெனக் கொண்டு, மூவுலகும் போற்ற அழிவற்ற இன்பம் நல்கும் தேவாதி தேவனின் திருவடியைப் போற்றுவோம் என்று சமண சமயக் காப்பியமான சீவகசிந்தாமணியில் திருத்தக்கத்தேவர் குறிப்பிடுகிறார். மூவா முதலா உலகம்ஒரு மூன்றும் ஏத்தத் தாவாத இன்பம் தலை யாயது தன்னின் எய்தி ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வனென்ப தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே! பாடல் பொருள்: மூன்று உலகமும் ஏத்தும் தன்மையன்; பேரின்ப வடிவினன்; உயர் குணங்கள் அனைத்தும் தாங்கியவன்; தேவர்களுக்கு எல்லாம் முதன்மையானவன்; அவன் திருவடிகளை வணங்கிப் போற்றுவோமாக.
📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 40poem
சமணம்
Chapter 51: சமணம் · ADVANCED TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →