📖 generic · 12th TN - English Medium · ADVANCED TAMIL · Page 34poem

நீலகேசி

Chapter 42: 26 · ADVANCED TAMIL

நீலகேசி சமணநூலான நீலகேசி குண்டலகேசிக்கு மறுப்புநூலாக இயற்றப்பட்டது. தமிழில் தEோன்றிய முதல் தருக்க நூல் இதுவெனக் கூறலாம். இதனை நீலகேசித் திரட்டு என்றும் அழைப்பர். பத்துச் சருக்கங்களையும், விருத்தப்பாக்களையும் கொண்டுள்ளது. பாஞ்சால நாட்டில் நடக்கும் உயிர்க்கொலையை, முனிச்சந்திரர் என்ற சமண முனிவர் தம் தவ வலிமையால் தடுத்தார். அவர் தவத்தைப் பழையனூர் நீலி அரசிபோல் வேடமிட்டு வந்து கலைக்க முயற்சிக்கிறது. ஆனால் அம்முயற்சியில் தEோற்ற அவள், அவருக்கே மனைவியாகிறாள். பின்னர் சமண சமயத்தின் உயிர்க் கொள்கையாகிய கொல்லாமையை உலகெங்கும் பரப்புவதE டு, சமயத் தலைவர்கள் பலரையும் வாதில் வென்று சமணத் தலைவியாகிறாள். தெய்வங்களுக்கு உயிர்ப்பலி இடுதல் தீமையே என்பதை நீலகேசி எடுத்துரைக்கிறது. இறைவன் அருளிய அறநெறியில் ஐயுறல் கூடாது; பேராசை தவிர்க்க வேண்டும்; மெய்த்துறவோரை மதித்தல் வேண்டும்; நட்பு, புகழ் இவற்றால் மயங்குதல் கூடாது; பிறர்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →