📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 156grammar_exercise

தொEொன்மம்

Chapter 6: 5 · TAMIL

தொEொன்மம் தொன்மம் (myth) என்றறால் பழங்கதை, புராணம் என்றறெல்லலாம் பொHொருள் உள்ளது. தொல்ககாப்பியர் குறிப்பிடும் வனப்புகளுள் ‘ தொன்மமை’ என்பதுவும் ஒன்றறாகும். காலம்ககாலமாக உருவாக்கப்பட்டு இறுகிவிட்ட கருத்து வடிவங்களும் தொன்மங்களே. தொன்மம் என்னும் சொல் இவை அனை த்ததையும் குறிக்கும்.

ஆனால், கவிதை யில் அது பழங்கதையை த் (புராணத்ததை) துணையாகக் கொண்டு ஒரு கருத்ததை விளக்குவதையே குறிக்கிறது. கடவுளர்கள், தே வர்கள் மக்கள், விலங்குகள் ஆகிய பல்வகை உயிரினங்களையும் ஒருங்கிணைத்து, படித்ததால் நம்ப முடியாதது போH ல் தோன்றுகின்ற செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் கொண்டு இயங்குகின்ற பழைமை யான கதை களையே தொன்மம் என்று கூறுவர். நம் அன்றறாடப் பே ச்சில் மரபுத் தொடர்களாகத் தொன்மங்கள் கலந்துள்ளன. ’ கிழித்த கோட்டடைத் தாண்டமாட்டடான்’ என்பது இராமாயணத்தில் பர்ணசாலையை விட்டு, சீதை வெளியே வந்ததால் தீங்கு வரும் என்பதற்ககாக இலக்குவன் கோடு கிழித்த நிகழ்விலிருந்து உருவான மரபுத் தொடராகும்.

இதுபோHோல, “இந்ததா போHோறான் சகுனி”, “இவன் பெரிய அரிச்சந்திரன்”, “கர்ணன் தோற்றறான்ப ” என்றறெல்லலாம் தொடர்களைப் பயன்படுத்துகிறோம். அறத்திற்குத் தருமன், வலிமை க்குப் பீமன், வள்ளல் தன்மமைக்குக் கர்ணன் என்று பலவாறு தொன்மக் கதை மாந்தர்களைப் பண்புக் குறியீடுகளாக மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். தொன்மங்கள் மக்களின் மனத்திலும் பேச்சிலும் இடம்பபெற்றிருப்பதால் அவற்றறைப் பயன்படுத்திச் சில செய்திகளைச் சுவை யாகச் சொல்ல முடிகிறது; விளங்ககாத கருத்துகளை எளிதில் விளங்க வை க்கமுடிகிறது. ஆகவே தொன்மம் இலக்கிய உத்தியாக ஏற்கப்பட்டிருக்கிறது.

காலங்ககாலமாக மனித மனங்களிடையே உறை ந்து கிடக்கும் தொல் கதை கள் பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. தொன்மக் கதைகள் உலகெங்கும் காப்பியங்களாகவும் புராணங்களாகவும் காவியங்களாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் உள்ள நிகழ்வுகளையும் கதை மாந்தர்களையும் தொன்மங்களாகப் படை ப்பபாளர்கள் பயன்படுத்துகின்றனர். மனிதர்களின் மனத்தில் இயல்பபாகவே கருத்துப் பொHொதிந்த கதைகள் படிந்து கிடக்கின்றன.

இதன்மூலம் கதை ச் ழலை யும் கதை மாந்தர்களின் செயல்பபாடுகளையும் விளங்கிக் கொள்வதோடு அவை உணர்த்தும் உட்பொ ருளையும் படிப்பவர் அறிந்துகொள்வர். தொன்மம் சார்ந்த படைப்புகளையும் அவர்கள் எளிதில் புரிந்துகொள்வர். இவ்வவாறாகத் தொன்மத்ததை வெளிப்படுத்தும் முதன்மமையான கருவியாகக் கவிதை விளங்குகிறது. உலகில் பெரும்பபாலான தொன்மங்கள் கவிதை கள் மூலமே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தொEொன்மம் – விளக்கம் சில தொன்மங்கள், சமய நம்பிக்ககைகளையும் சடங்குகளையும் வெளிச்சப்படுத்துகின்றன. இன்னும் சில தொன்மங்கள் உவமைக் கதைகளாகவும் மெய்யியல் உருவகங்களாகவும் நின்று சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றன. தொன்மங்களை அறிவியல் முறையில் ஆய்வு செய்யவோ புரிந்துகொள்ளவோ முடியாது. அவை சமுதாயத்தின் ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுவனவாகவும் அவற்றினால் ஏற்படும் கூட்டமைப்பின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன என்று ‘வெப்ஸ்டடார்ஸ் தேர்டு நியூ இன்டர்நநேஷனல் அகராதி’ புலப்படுத்துகின்றது.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →